Tuesday, 25 November 2014

எதிரிகளை வெல்ல நரசிம்ம மந்திரம்


நரசிம்ம மந்திரம்

அஸ்யஸ்ரீ ந்ருஸிம்மாநுஷ்டுப் மஹா மந்த்ரஸ்ய
ப்ரும்மா ருஷி: அநுஷ்டுப்ச்சந்த்:

ஸ்ரீ லக்ஷ?மீ ந்ருஸிம்மகோ தேவதா-ஸ்ரீ லக்ஷ?மீ
ந்ருஸிம்ம ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:

உக்ரம் வீரம் - அங்குஷ்டாப்யாம் நம
மஹா விஷ்ணும்-தர்ஜனீப்யாம் நம
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்-மத்ய மாப்யாம் நம
ந்ருஸிம்மம் பீஷணம்-அநாமிகாப்யாம் நம
பத்ரம் ம்ருத்யூம்ருத்யும்-கநிஷ்டிகாப்யாம் நம
நமாம்யஹம்-கரதலகரப்ருஷ்டாப்யாம் நம
உக்ரம் வீரம்-ஹ்ருதயாய நம
மஹாவிஷ்ணும்-சிரஸே ஸ்வாஹா
ஜ்வலந்தம் ஸர்வ தோமுகம்-சிகாயை வஷட்
ந்ருஸிம்மம் பீஷணம்-கவசாய ஸும்
பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும்-நேத்ராத்யாய வெளஷட்
நமாம்யஹம்-அஸ்த்ராய பட்
ஓம் பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

மாணிக்யாதி ஸமப்ரபம் நிஜருஜா ஸந்த்ராஸ்ய
÷க்ஷõகணம்: ஜாநுந்யஸ்த கராம்புஜம்
த்ரிநயனம் ரத்நோல்லஸத் பூஷணம்
பாஹுப்யாம் த்ருத சங்க சக்ர மநிசம் தம்ஷ்ட்ரோக்ர
வக்த் ரோஜ்வலம்: ஜ்வாலா ஜிஹ்வ முதக்ர
கேச நிவஹம் வந்தே ந்ருஸிம்மம் விபும்
லம்-பிருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி
அம்-ஆகாசாத்மனே புஷ்பாணி ஸமர்ப்பயாமி
யம்-வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி
ரம்-வஹ்னி யாத்மனே தீபம் தர்சயாமி
வம்-அம்ருதாத்மனே அம்ருதம் நிவேதயாமி
ஸம்-ஸர்வாத்மனே ஸர்வோபசாரான் ஸமர்ப்பயாமீ

மூலமந்திரம்

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம்
ஸர்வதோ முகம்! ந்ருஸிம்மம் பீஷணம்
பத்ரம் மிருத்யு மிருத்யும் நமாம்யஹம்


துக்கம் விலக மந்திரம்



துர்க்காம் மேஹ்ருதயஸ்திதாம் நவநவாம் தேவீம் குமாரீமஹம்
நித்யம் ஸர்வபயேன பக்திபரித: ஸூக்தேயதாம்னாயதே
துர்க்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே மந்த்ரம் ஸதா ஸ்ருத் க்ருதான்
அஸ்மான் ரக்ஷணதீக்ஷ?தாம் ஸுமஹதீம் வந்தே ஜகன்மாதரம்

துர்க்கை அம்மா என் உள்ளத்தில் குமாரியாக இருக்கிறாள். அவளை பயபக்தியுடன் சொன்னபடி துர்கா தேவி அம்பாளை சரணடைகிறேன் என்ற மந்திரத்தை ஹ்ருதயத்திலேயே ஜபித்துக் கொண்டிருக்கும் எங்களை ரக்ஷ?ப்பதிலேயே முக்கியமான கருணையுடன் இருக்கும் மஹாதேவி ஜகன்மாதாவை சரணம் அடைகிறேன். இந்த நவதுர்கா ஸ்லோகம் துர்க்காம் என்று ஆரம்பித்து வந்தே ஜகன்மாதரம் என்று முடிக்கும். இதைப் பாராயணம் செய்பவர்களுக்கு கஷ்டம், நோய், துக்கம் வராது என்பது சத்யம். ÷க்ஷமம் வருவது நிஜம்

சௌபாக்கிய லட்சுமி

ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா: பதிமதீ:
ஸெளந்தர்ய ரத்னாகரா:
பர்த்தாஸங்கமுபேயுஷீ: ஸுவஸனீ:
ஸீமந்தனீஸ் ஸுப்ரியா:
ப்ரேம்ணா புத்ரகிருஹாதி பாக்யவிபவை:
ஸம்யோஜ்ய ஸம்ரக்ஷதீம்
ஸ்ரீ விஷ்ணுப்ரியகாமினீம் சுபகரீம்
ஸெளபாக்ய லக்ஷமீம் பஜே

சௌமங்கல்யத்தை விரும்பும் சுமங்கலிகள் சௌபாக்கிய லட்சுமிக்கு பிரியமானவர்கள். அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்டம், வாகனம்,
ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும் ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி
அம்மாளை ஜெபிக்கிறேன்.


நவகிரக மந்திரங்கள்


ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியாக மூல மந்திரம் உண்டு. அமைதியாகவும் தெளிவாகவும் ஆழ்ந்த கவனத்தோடும் ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய மந்திரங்களை குறைந்தபட்சம் மும்மூன்று முறைகள் உச்சரிக்க வேண்டும். ஒன்பது முறைகளும் உச்சரிக்கலாம். அவகாசம் இருப்பவர்கள் 27 முறைகளும், 54 முறைகளும், 108 முறைகளும் உச்சரிக்கலாம். குறைந்த அளவு உச்சரித்தாலும்கூட நிறைந்த ஈடுபாட்டையும், ஆழ்ந்த கவனத்தையும் செலுத்துவது அவசியமாகும்.

சூரிய மந்திரம்:

ஜபா குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்.

செம்பருத்திப் பூவின் நிறம் உடையவன்; காச்யபரின் புதல்வன்; மிகவும் பிரகாசம் உடையவன்; இருட்டின் பகைவன்; எல்லாப் பாவங்களையும் அழிப்பவன்; அப்பகலவனைப் பணிகிறேன்.

சந்திர மந்திரம்:

ததிசங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி சசினம் ஸோமம் சம்போர் மகுடம் பூஷணம்.

தயிர், சங்கு, பனி போன்று வெண்மையானவன்; பாற்கடலிலிருந்து தோன்றியவன். முயல் சின்னம் உடையவன். ஸோமன் என்று வேதத்தில் அழைக்கப் பெறுபவன். சிவனது ஜடாமகுடத்தின் அணிகலன். அச்சந்திரனைப் பணிகிறேன்.

செவ்வாய் மந்திரம்:

தரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத் காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்.

பூமி தேவியின் கர்ப்பத்தில் உதித்தவன்; மின்னலைப் போன்ற ஒளியினன்; குமாரன்; சக்தி ஆயுதம் தரிப்பவன். அந்த மங்களன் எனும் செவ்வாயைப் பணிகிறேன்.

புதன் மந்திரம்:

ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேண அப்ரதிமம் சுபம்
ஸெளம்யம் ஸெளம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்.

ஞாழல் மொட்டுப்போன்ற ஒளியுடையவன். உருவத்தின் அழகில் உவமை அற்றவன். சந்திரனின் குமாரன். ஸெளம்யமானவன். அந்த புதனைப் பணிகிறேன்.

குரு மந்திரம்:

தேவானாம்ச ருஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகஸ்ய தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.

தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ஆசாரியன்; பொன்னன்; மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவன்; அந்தப் பிருஹஸ்பதியை வணங்குகிறேன்.

சுக்கிர மந்திரம்:

ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்.

பனி, முல்லை, தாமரை நூல் போன்ற வெண்மையான நிறமுடையவன்; அசுரர்களின் குரு; எல்லாச் சாத்திரங்களையும் உரைப்பவன். பிருகுவின் புதல்வன்; அந்தச் சுக்கிரனை வணங்குகிறேன்.

சனி மந்திரம்:

நீலாஞ்ஜன ஸமானாபம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்சரம்

மை போன்று கறுத்தவன். சூரியனின் குமாரன். யமனின் தமயன். சூரியனுக்கும் சாயா தேவிக்கும் பிறந்தவன். மெதுவாகச் செல்லும் அந்தச் சனியை நமஸ்கரிக்கிறேன்.

ராகு மந்திரம்:

அர்த்த காயம் மஹாவீரம் சந்த்ராதித்ய விமர்த்தகம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்.

பாதி உடல் கொண்டவன்; பெரும் வீரன்; சந்திர சூரியர்களைப் பீடிப்பவன்; அகர ஸ்திரீயின் கர்ப்பத்தில் உதித்தவன். அந்த ராகுவைப் பணிகிறேன்.

கேது மந்திரம்:

பலாசபுஷ்ப ஸங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்.

புரசு மரத்தின் பூப்போன்ற செந்நிறம் கொண்டவன். நட்சத்திரங்கள், கிரகங்களில் தலையானவன். கோபி; கோபத்தின் உருவுடையோன். அந்தக் கேதுவைப் பணிகிறேன். இந்த மந்திரங்களை உச்சரிப்பது உங்கள் மனதில் தெளிவை ஏற்படுத்துவதற்காகவும், வாழ்க்கையில் நலம் உண்டாவதற்காகவும் தான் என்பதில் சந்தேகமில்லை. இவற்றை உச்சரிப்பதோடு மட்டுமிராமல் ஒரு முக்கியத்துவம் கொடுத்து உங்களால் இயன்ற அளவுக்கு மற்றையோருக்கு நன்மைகளைச் செய்வதிலும், சங்கடப்படுகின்றவர்களுக்குச் சகாயம் செய்வதிலும் மனத்தூய்மையுடன் ஈடுபடுவது அவசியமாகும்.


சங்கு பூஜை செய்யும் முறை


வலம்புரிச் சங்கு என்கிற கடல் வாழ் நத்தையின் கூட்டை வழிபட்டால் நம்மைத்தேடி மகாலட்சுமி வருவாள் என்று வேதவாக்கியம் சொல்கிறது. நம் வீட்டில் வலம்புரிச் சங்கு பூஜை, முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷமும் அகன்று விடுகிறது. இதை

சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி
அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாதிகம் தஹேத்

என்ற வரிகளால் அறிந்து கொள்ளலாம். வாஸ்துக் குறை வீட்டில் காணப்பட்டால் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டுக் காலையில் தெளித்து விட்டால் குறைகள் நீங்குவதாக ஐதீகம் இருக்கிறது. முற்காலங்களில் மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்ததற்குக் காரணம், வீடு கட்டும்போது ஐந்து வெள்ளிக் கிழமைகள் லக்ஷ்மி வஸ்ய பூஜை செய்த வலம்புரிச் சங்கை வீட்டு நிலை வாசற் படியில் வைத்து- நடு ஹாலில் சங்கு ஸ்தாபன பூஜை செய்து திருமகள் மற்றும் வாஸ்து பகவானை வழிபட்டார்கள். எந்தக் குறைவும் இல்லாமல் அவர்களால் வாழ முடிந்தது.

சங்கு பூஜை செய்யும் முறை: 48 நாள் தினமும் செய்ய விருப்பம் உடையவர்கள் காலை உடற்சுத்தம் செய்துவிட்டு வலம் புரிச் சங்கை சுத்தமான நீரில் அலம்பி சந்தனம் குங்குமம் இட்டு பிளந்த பாகம் வெளிப்பக்கமாக வைத்து மஞ்சள் பொடி சிறிது இட்டு நீர் ஊற்றியபின் ஓம் கம் கணேசாய நம ஸ்ரீ குருதேவாய நம என்ற பின்

ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே 
பாவ மானாய த்மஹி 
தந்நோ சங்க ப்ரசோதயாத்

என்னும் சங்கு காயத்ரியை 3 முறை சொன்ன பிறகு-ஸ்வாகதம்... ஸ்வாகதம் ஸ்ரீ லக்ஷ்மீ குபேராய நம என்று சங்கில் குபேரனை அழைக்க வேண்டும், பிறகு ஓம் நவநிதி தேவதாயை நம சகல ஆராதனை சுவர்ச்சிதம் என்று சிவப்பு மலரைப் போட வேண்டும், (வலம்புரிச் சங்கின் அளவைப் பொறுத்து தாமிரத் தட்டில் பச்சை அரிசி போட்டு அதன்மேல் சங்கை குபேரன் படத்தின் முன் வைக்க வேண்டும். மூன்று முக நெய் தீபம் ஒன்று ஏற்றினால் போதும். பிறகு துளசி, அரளி, சிவப்பு மலர், மல்லிகை கலந்து பன்னீர் தெளித்து வைத்துக் கொண்டு சங்கைச் சுற்றி மலர் தூவ வேண்டும்.

ஓம் பத்ம நதியே நம 
ஓம் சங்க நிதியே நம
ஓம் மகரநிதியே நம 
ஓம் சுகச்சப நிதியே நம
ஓம் முகுந்த நிதியே நம
ஓம் குந்தாக்ய நிதியே நம
ஓம் நீல நிதியே நம
ஓம் மகநிதியே நம 
ஓம் வரநிதியே நம
என்று நிதிகளை பூஜிக்க வேண்டும், மும்முறை குபேர காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.

ஓம் யக்ஷசாய வித்மஹே 
வைச்ரவ னாய த்மஹி
தந்நோ ஸ்ரீத ப்ரசோதயாத். 
பிறகு 16 நாமாவளி அர்ச்சனை செய்து (மஞ்சள் குங்குமத்தால் செய்வது மிக விசேஷமானது)

ஓம் க்லீம் குபேராய நம
ஓம் க்லீம் ஸ்ரீமதே நம
ஓம் க்லீம் பூர்ணாய நம
ஓம் க்லீம் அஸ்வாரூடாய நம
ஓம் க்லீம் நரவாகனாய நம
ஓம் க்லீம் சதா புஷ்பக வாகநாய நம
ஓம் க்லீம் யக்ஷõய நம 
ஓம் க்லீம் நித்யேஸ்வராய நம
ஓம் க்லீம் நித்யானந்தாய நம 
ஓம் க்லீம் தனலக்ஷ்மி வாஸாய நம
ஓம் க்லீம் அகாஸ்ரயாய நம
ஓம் க்லீம் மகதைஸ்வர்ய ரூபாய நம
ஓம் க்லீம் சர்வக்ஞாய நம
ஓம் க்லீம் சிவபூஜகாய நம
ஓம் க்லீம் ராஜயோக வராய நம

அர்ச்சனை முடிந்த பிறகு குபேர காயத்ரி சொன்ன பிறகு தூப தீபம் காட்டி ஓம் ஸ்ரீம் லக்ஷ்மி சகித குபேராய நம: மம க்ரஹே அமுதம் நித்யானந்த வாஸம் குரு குரு.. என்று ஆத்ம பிரதட்சிணம் செய்து மலர் போட வேண்டும். கற்கண்டு, பால், அவல் பாயாசம் நிவேதித்து நெய் தீபத்தை கற்பூர ஆரத்திக்குப் பதிலாகக் காட்ட வேண்டும், நமஸ்காரம் செய்த பிறகு.

ஓம் வட திசை வல்லவா போற்றி
ஓம் நவநிதி தேவா போற்றி
ஓம் செல்வத்தின் உருவமே போற்றி
ஓம் செல்வ வளம் சேர்ப்பாய் போற்றி
ஓம் திருமகளின் நட்பே போற்றி
ஓம் ஐஸ்வர்ய கடாட்சமே போற்றி
ஓம் ஆனந்தத்தின் தனமே போற்றி
ஓம் குபேர நாயக போற்றி

என்று நமஸ்காரம் செய்து ஒரு பெண்ணுக்கு தாம்பூலம் மஞ்சள் தரவேண்டும்.

எளிமையான இந்த குபேர பூஜையை 48 நாட்கள் தொடர்ந்து செய்தால் குடும்ப வருமானம் செழிக்கும். 6 வெள்ளிகள் கடன் தீர வழி ஏற்படும். வியாழக்கிழமை மாலை 5 முதல் 7.30 மணி வரை குபேர காலத்தில் செய்து 9ம் வியாழன் யக்ஞத்துடன் முடிக்க பொருள் சேர வழி உண்டு. 8 பவுர்ணமிகள் குபேர அர்ச்சனையுடன் எளிதாய்ச் செய்து வர செல்வம் சேர வாய்ப்பு உருவாகும். எல்லோருக்கும் நவநிதி லக்ஷ்மி குபேர தரிசனம் கிடைக்கட்டும்


ஸ்வர்ணாகர்ஷண பைரவ மந்திரம்


ஓம் அஸ்ய ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ 
மகா மந்த்ரஸ்ய பிரும்மா ருஷி: பங்திஸ் சந்தஹ:
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ தேவதா:
ஸ்வர்ணாகர்ஷண பைரவ பிரசாத சித்யர்த்தே
ஸ்வர்ண ஆகர்ஷண சித்யர்த்தே ஜபே வினியோக:

தியானம்

காங்கேய பாத்ரம் டமருகம் த்ரிசூலம்
வரம் கரை: ஸமசந்ததம் த்ரிநேத்ரம்
தேவ்யாயுதம் தப்த ஸ்வர்ண வர்ஷணம்
ஸ்வர்ணாகர்ஷணம் பைரவம் ஆஸ்ரயாம்யகம்
ஸ்வர்ணகர்ஷணபைரவர் காயத்ரி

ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹர ப்ரம்ஹாத்மகாய தீமஹி
தந்தோ ஸ்வர்ணகர்ஷணபைரவ: ப்ரசோதயாத்

ஸ்வர்ணப்ரத என்று தொடங்கும் பன்னிரண்டு நாமாக்களால் பூஜிக்கின்றவனுக்கு பைரவர் பொற்குவியலை அருள்வார் என்று சாஸ்திரமறிந்த பெரியோர் கூறுவர்.

ஸ்வர்ணகர்ஷணபைரவர் பன்னிரண்டு நாமாக்கள்

ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ
ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ
ஓம் ஸ்வர்ணாகர்ஷண பைரவ நமஹ
ஓம் பக்தப்ரிய நமஹ
ஓம் பக்த வச்ய நமஹ
ஓம் பக்தா பீஷ்ட பலப்ரத நமஹ
ஓம் ஸித்தித நமஹ
ஓம் கருணாமூர்த்தி நமஹ
ஓம் பக்தபீஷ்ட ப்ரபூரக நமஹ
ஓம் நிதிஸித்திப்ரத நமஹ
ஓம் ஸ்வர்ணா ஸித்தித நமஹ
ஓம் ரசஸித்தித நமஹ.

பய நிவர்த்தி பைரவ மந்த்ரம்

ஓம் ஆபதூதாரணாய
அஜாமில பந்தனாய
துஷ்ட்ட நிக்ரஹாய
சிஷ்ட்ட பரிபால ஸ்வரூபாய
மம-தாரித்ரய-துக்கதகனாய
மம-சாப சோ பாப சல்லிய தோஷ நிவர்த்திகராய
தனாகர்ஷணாய
ஸ்வர்ணாகர்ஷணாய
சகல கார்ய அனுகூல சித்திகராய
சகல சத்ரு தோஷ நிவர்த்திகராய
சகல வியாதி பீடா நிவர்த்திகராய
ஓம் ஸ்ரீ கால பைரவாய நமஹ:


Thursday, 20 November 2014

ஏவல் பில்லி சூன்யம் உண்மையா ,பொய்யா ?

பிரபஞ்சத்தில் சுற்றித் திரியும் ஆவிகளில் நல்லவை, தீயவை- என்ற இரண்டுமே மந்திரங்களின் சக்திகளுக்கு உட்பட்டவைகளே. அதாவது மந்திரங்கள் ஒரு வித ஒலியை வெளிப்படுத்த அந்த ஒலிக்கு கட்டுப்படுபவை ஆவிகள். மந்திர உச்சாடனையில் இருந்து எழும்பும் ஒலியை  அதிர்வு என்கிறார்கள். இந்த மாதிரியான மந்திரங்கள் நான் முன்னரே கூறி உள்ளபடி அதர்வன் வேதத்தில் உள்ளன. அ வை அபிசார மந்திரங்கள் எனப்படும். அந்த அபிசார மந்திரங்களைப் போலவே மேலும்  பல மந்திரங்கள் உள்ளன. மந்திரங்கள் என்பது வேத காலத்தில் இருந்தே உள்ளவை.  ஆனால் அந்த மந்திரங்களை சரியான முறையுடன் உச்சரிக்க வேண்டும். முறையாக ஓதப்படாத மந்திரங்களுக்கு சக்தி இல்லை. அது மட்டும் அல்ல, முறையாக ஓதப்படாத மந்திர  உச்சரிப்புக்களினால் அதை உச்சரித்தவர்களையே திருப்பித் தாக்கும் என்பார்கள்.  ஆகவே மந்திரம் என்பது சாதாரண விஷயமும் அல்ல. அந்த மந்திரங்களை உச்சரிக்கும்போது எழும்பும் ஒலிக் கற்றைகள் ஒரு ஒளி போல காற்றில் பறந்து சென்று அதிர்வு மூலம் அங்கு சுற்றித் திரியும் ஆவிகளை தாக்கி அவற்றை செயலிழக்கச் செய்யும். 


அதைத் தொடர்ந்து ஓதப்படும் மந்திரங்கள் அவற்றைக் கட்டி அந்த மந்திரத்தை ஓதியவரிடம் இழுத்துக் கொண்டு வந்து விட அவர்கள் அதை தம்மிடம் உள்ள மந்திரக் கூடுகளில் பிடித்து வைத்துக் கொண்டு விடுவார்கள் . இப்படியாகத்தான்  மந்திரவாதிகளிடம் பல தீய ஆவிகள் கட்டுண்டு கிடக்கின்றன. அப்படியென்றால் யார் வேண்டுமானாலும்  அந்த மந்திரங்களை ஓத முடியுமா என்றால் அது முடியாது. அதற்கு விசேஷ பயிற்சி தேவை. மேலும் அதற்கென உள்ள தேவதைகளை பூஜித்து  அதன் அருளைப் பெற்றாலே அது அந்த சக்தியை அதனை ஆராதித்தவர்களுக்குத் தரும். அந்த சக்தி தரும் தேவதைகளைப் படைத்தது யார்? முன்னரே கூறியபடி, தெய்வங்கள், தேவதைகள் என்ற அனைத்தையும் படைத்தது மூன்று அவதாரங்களின் வழித் தோன்றல் அவதாரங்களே.  நல்லவை உள்ள இடத்தில் தீமைகளும் இருக்க வேண்டும் என்பது நியதி என்பதினால் நல்ல தேவதைகளுக்கு மத்தியில் தீய தேவதைகளும் படைக்கப்பட்டு உள்ளார்கள். ஆனாலும் அந்த தீய தேவதைகள் பல நல்ல மனமுடைய அவதாரங்களுக்குக் கட்டுப்பட்டவை. அவற்றினால் அவதாரங்களாய் மீறி எதையும் செய்ய முடியாது. அதனால்தான் செய்வினைகள் நம்மைத் தாக்காமல் இருக்க கால பைரவர், ஹனுமான் போன்றவர்களை வணங்குமாறு அறிவுறுத்துவார்கள்.

தீய தேவதைகள் மயானங்களில் பெரும்பாலும் தங்கி இருக்கும். அதுவும் அகால மரணம் அடைந்து சிதைகளில் எரிக்கப்படும்போதும், புதைக்கப்படும்போதும் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அந்த உடலின் கபாலத்தில் இருந்து ஆத்மாக்கள் முற்றிலும் வெளியேறும். அப்போது அங்குள்ள தீய தேவதைகளின் ஆதிக்கத்தில் அவை விழுந்து விடும். ஆனாலும் அவற்றை அந்த தேவதைகளினால் அங்கு ஒன்றும் செய்ய முடியாது. அந்த ஆத்மாக்கள் மேலுலகை நோக்கிச் செல்லத் துவங்கும்போது அந்த ஆத்மாக்களை தொடர்ந்து இந்த தீய தேவதைகளும் சென்று கொண்டு இருக்கும். போகும் பாதையில் அவை ஏமார்ந்தால் அவற்றை தன் வசம் இழுத்து வந்துவிடும்.  இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால், தீய ஆவிகளும், துர்தேவதைகளும் பெண்ணினத்தை சேர்ந்தவையாகவே உள்ளன!!!  அது ஏன் என்பதை பின்னர் ஒரு கட்டுரையில் விரிவாக விளக்குகின்றேன்.

 பெண்ணின் தீய ஆவி 

மந்திரவாதிகள் இத்தகைய தீய தேவதைகளை ஆராதித்தே பல ஆவிகளை  பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். அவற்றை எப்படி பிடித்து வைத்துக் கொள்கிறார்கள் என்பதை மேலே விவரித்து உள்ளேன். மந்திரவாதிகளிலும் நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் என  இரண்டு வகையினர் உண்டு. மந்திரவாதிகளை மக்கள் அணுகுவதின்  காரணங்கள்:-

வறுமை நீங்க வேண்டும்
தொழில் நன்கு செழிக்க வேண்டும்
திருமணம் நிறைவேற வேண்டும்
இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வேண்டும்
வேலைக் கிடைக்க வேண்டும்
காதலில் வெற்றி பெற வேண்டும்
தனக்கு தொல்லைகளை தருபவர் அழிய வேண்டும்  
தமக்குள்ள நோய் நொடிகள் தீர வேண்டும்
சொத்துத் தகராறில் குறிப்பிட்ட ஒருவர் அழிய வேண்டும் (மரணம் அல்ல)
ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் அழிய வேண்டும்
வேறு காரணங்களினால் குறிப்பிட்டவர் மன நிலை பாதிப்பு அடைய வேண்டும்
குறிப்பிட்டவர் விரைவில் அகால மரணம் அடைய வேண்டும்

இப்படியான பலவித  எண்ணங்களுடன் அவர்களை அணுகும்போது அவர்கள் கொடுக்கும் பணத்திற்கேற்ப மந்திரவாதிகள் நன்மைகளையோ அல்லது தீமைகளை செய்யத் தவறுவது இல்லை. அவர்களால் அனைவருக்கும் அந்த தீமைகளை ஏற்படுத்த முடியுமா என்றால் அது முடியாது என்றே கூற வேண்டும். மந்திரவாதிகளை மட்டும் அல்ல பலவித சாதுக்களையும், ஆன்மீகவாதிகளையும் மக்கள் இதற்காக அணுகுகிறார்கள். அவர்களும் தம்மை நாடி வருபவர்களுக்கு மந்திர ஆராதனை செய்யப்பட்ட சில யந்திரங்களையும், தாயத்துக்களையும் தருகிறார்கள்.  அவற்றுக்குள்ளும் மந்திரம் ஓதப்பட்ட சில பொருட்களே உள்ளன. ஆக அனைத்துமே மந்திரங்களின் அடிப்படையில்தான் - தேவதைகளின் மூலமே-  இயங்குகின்றன. அதில் உள்ள தேவதைகள் நல்லவையா அல்லது துர்தேவதிகளா  என்பது வேறு விஷயம்.  தீய ஆவிகளைக்  கொண்டு யாருக்கு பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும்?

யாருடைய கிரஹ நிலை மோசமாக, பலவீனமாக உள்ளதோ அவர்களுக்கு
யாருடைய உடல்நிலை நன்றாக இல்லையோ அவர்களுக்கு
யாருடைய மனநிலை குழப்பமாக உள்ளதோ அவர்களுக்கு
தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு
கர்ம வினை உள்ளவர்களுக்கு
மற்றும் அதிக அளவில் பெண்களுக்கு

ஆமாம் செய்வினை வைக்க என்ன செய்கிறார்கள்? முதலில் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவர்களுடைய புகைப்படம், அவர்கள் பயன்படுத்தும் ஏதாவது சிறிய துணிமணிகள், பொருட்கள் (அதாவது அந்த நபர் தொட்டவை), அவர்கள் நடந்து சென்ற இடத்தின் பூமி மண் (அதன் மீது மற்றவர்கள் நடக்கும் முன்) , அல்லது அவர்களின் தலை முடி போன்றவற்றைக் கொண்டு வரச்சொல்லி அவற்றை ஒரு பொம்மையுடன் சேர்த்துக் கட்டி அந்த பொம்மைக்கு தீய ஆவியின் மந்திரம் ஏவி அதைப் புதைத்து விடுவார்கள். அவ்வளவுதான். அதைப் புதைத்தவுடன் அந்த ஆவி யாருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவர்கள் உள்ள இடத்தை அடைந்து அவர்களை தாக்கத் துவங்கும். இதற்கு மரத்திலான பொம்மைகளையே பயன்படுத்துகிறார்கள். காரணம் மண்ணினால் செய்த பொம்மைகள் புதைக்கும் போது உடைந்து விட்டால், அல்லது புதைத்த இடம் யார் செய்வினை செய்தார்களோ அவர்கள் வீட்டின் அருகில் இருந்தால் அவை யார் செய்வினை வைத்தார்களோ அவர்கள் மீதே பாய்ந்து விடும். உடையாமல் இருக்கும்வரைதான் யாருக்கு வைக்கப்பட்டதோ அவர்களை சென்று தாக்கும். உடைந்து விட்டலோ எதிர்மறையாகி விடும்.

 அந்த தீய ஆவிகள் எப்படித் தாக்குகின்றன? யாரை அது தாக்க வேண்டுமோ அங்கு சென்று அந்த ஆவிகள் ஒருவித ஒலியை ஏற்படுத்தி அவற்றை அவர்களுடைய மூளையில் செலுத்தும். அது அனைவருக்கும் கேட்காது. அந்த ஒலிகள் பாதிக்கப்பட்டவரின் மூளைக்குள் புகுந்து கொண்டவுடன் அவர்களது சிந்திக்கும் திறனை உடனடியாக நிறுத்தி விட்டு வேறு எதை எதையோ செய்யுமாறு கட்டளை இட்டபடி இருக்கும். அவர்களும் மூளையில் இருந்து கிடைக்கும் கட்டளைக்கு ஏற்ப கோமாளித்தனமான , பயங்கரமான, பல தீய காரியங்களை செய்யத் துவங்குவார்கள். அது மட்டும் அல்ல அந்த தீய ஆவிகள் அவ்வப்போது தமது சக்தியை அவர்களுக்குள் செலுத்தி வருவதினால்  அந்த நேரங்களில் அவர்களின் சக்தி அளவற்று அதிகரித்து முரட்டுத் தனமாக இருப்பார்கள். நம்முடைய சக்திக்கும் மீறி அவர்களது உடலின் சக்தி அதிகமாக இருக்கும். தீய ஆவிகள் மற்றுள் சிலரது நரம்புகளில் புகுந்து கொண்டு அவற்றை முறுக்கும்,  நெற்றிப் பொட்டில் அடித்துக் கொண்டே இருக்கும் (அனைத்துமே ஒலி அலைகள் மூலம்). 

இப்படியாக செய்து அவர்களை முழுமையாக செயல் இழக்க வைத்து நல்ல உடல் நலத்தை நாசமாக்கி விட அவர்கள் உடலில் சக்தி இல்லாமல், யோசனை செய்யக்கூட சக்தி இல்லாமல் ஒடிந்து போவார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களுடன் வீடுகளில் தீய ஆவிகளும் நுழைந்து விடும். அந்த தீய ஆவிகள் நுழையும் வீடுகளில் உள்ளவர்களை நிம்மதி இல்லாமல் செய்துவிடும். பொருட்களை கீழே விழ வைக்கும்.  அவ்வபோது பீதி கலந்த சூழ்நிலையை உருவாக்கும். செய்வது அனைத்துமே நஷ்டத்தில் போய் முடியும் வகையில் யாராவது மூலமாவது அவற்றை செய்யும். வியாதி இல்லாதவர்களுக்கு இல்லாத பொல்லாத வியாதிகளை வரவழைக்கும். 

அந்த நிலை முடிவில்லாமல் தொடர்ந்து இருக்குமா? அதுவும் கிடையாது. ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு குறிப்பிட்ட காலம்வரைதான் துஷ்ட சக்தியும் இருக்கும். அது போய் விட்டால் அந்த ஏவலும் தானாகவே போய் விடும். அதனால்தான் ஏவலை வைப்பவர்கள் பல காலம் இருக்கும் வகையில் ஏவல்களை வைப்பார்கள். மிஸ்டிக் செல்வம் என்பவர் ஒரு கட்டுரையில் இப்படியாக குறிப்பிட்டு உள்ளார் : ''ஆவிகளின் ஆயுட் காலம் எந்தக் கணக்கிற்கும் அகப்படாத ஒரு புரியாத புதிராகவே இருக்கும் என்று தோன்றுகிறது. பாவ புண்ணியங்களின் அளவில் சொர்க்க நரகங்கள் தீர்மானிக்கப்பட்டால் அவைகளில் வாசம் புரியும் காலம் பிறப்புக் கடவுகளின் கையிலேயே இருப்பது புரிகிறது. யாருக்கு எப்போதும் பூமி வாசம் கொடுக்க வேண்டும் என்று அவன் கருதுகிறானோ அதுவரை ஆவிகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆனாலும் கூட சூட்சம் தேகத்திலேயே வாழும்படி நேரிடுகிறது. அப்படி வாழ்வது தண்டனையா சன்மானமா என்பது நமக்குப் புரியவில்லை. அதைக் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் நமக்கு இல்லை.'' 

அதே நேரத்தில் நல்லெண்ணம் படைத்த மந்திரவாதிகளும் உண்டு. அவர்களின் வேலை மேலே கூறிய அனைத்து தீய செயல்களுக்கும் பரிகாரம் செய்து அவற்றின் மூலம் நிகழும் தீமைகளை அழிப்பதே. அவர்களும் அதற்காக நல்ல தேவதைகளின் ஆராதனை மந்திரங்களை  உச்சரித்தவண்ணம்  தீய ஆவிகளை விரட்டி அனுப்புவார்கள்.  துரதிஷ்டவசமாக எந்த மந்திரவாதியின் மந்திர சக்தி அதிக வலிமையானதோ அவர்களுடைய முயற்சியே வெற்றி பெரும் என்பது புலனாகும்.


ஆண் பெண் பாவை செய்து பிரச்சனைகளை தீர்க்கும் விதம்


பாவையின் வகைகள் :

மெழுகு பொம்மை பாவை 
மாவினால் பாவை செய்தல் 
சுடுகாட்டு சாம்பலினால்  பாவை செய்தல் 
மஞ்சள் கிழங்கினால் பாவை செய்தல் 
களிமண்ணால் பாவை செய்தல் 
மரத்தினால் பாவை செய்தல்

இப்படியாக பாவை இந்த முறைகளில் செய்யப்படுகிறது .இத்தனை வகை பாவை எதற்காக பயன்படுத்தலாம் என்றால் அஷ்ட கர்மங்கள் ஆடவும் ,எதிரிகளின் கரு ஒன்றும் நம் கையில் இல்லாத சூழலில் இந்த பாவை செய்து அதில் அதற்குரிய மந்திர உருக்களை ஏற்றி அவர்கள் வீட்டின் முன் புதைத்தால் அந்த பாவையை தாண்டிய உடன் அவனுக்கு நன்மையோ தீமையோ நடக்கும் .

இந்த முறையினால் பிரச்சனையில் அகப்பட்டவர்கள் நம்மிடம் நேராக வர வேண்டிய கட்டாயம் இல்லை அவர்களுடைய கரு மட்டும் இருந்தால் போதும் அவர்கல்க்குரிய ஏவல் பில்லி சூன்யம் பேய் பிசாசு பிரம்மராட்சசி போன்ற அனைத்து வகையான பிரச்சனைகளையும் அந்த நபர் வராமலேயே எழுத்தில் விரட்டி விட முடியும் .

இந்த பாவையினை பயன்படுத்துவது எப்படி என்றால் ஒவ்வொரு காரியங்களுக்கும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்த வேண்டும் .ஆகவே குருவின் ஆலோசனைப்படி முறை அறிந்து இந்த சூட்சமங்களை தெரிந்து செய்தால் வெற்றி நிச்சயம் ஒரு சில பாவைக்குள் யந்திரங்கள் வைத்தும் பாவை செய்வார்கள் ஒரு சிலவற்றில் அதற்கான மூலிகை வேர்களை பாவையின் வயிறில் வைப்பார்கள் ஒரு சிலவற்றில் ஐங்கோல மை வைப்பார்கள் .ஒவ்வொரு கர்மங்களுக்கும் தனித்தனியான மந்திரங்கள் உண்டு .பொதுவான மந்திரங்கள் உபயோகிக்க கூடாது .

இந்த பாவை வைத்து செய்யப்படும் அஷ்ட கர்மங்கலளான .............

வசியம் 
மோகனம் 
தம்பனம் 
ஆகர்சனம் 
வித்வேஷனம் 
பேதனம் 
உச்சாடனம் 
மாரணம் 
இவைகளை மிகவும் சரியாக செய்து முடிக்க முடியும் ஆனால் இப்போது பலருக்கும் இவ்வகை முறை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை இது அதர்வண வேத முறை என்றும் அகத்தியர் சுவடிகளிலும் இதைப்பற்றி எழுதியிருப்பதாக கூறுகிறார்கள் .