Showing posts with label ஐங்கோல மை பிரயோகம் மற்றும் செய்முறை. Show all posts
Showing posts with label ஐங்கோல மை பிரயோகம் மற்றும் செய்முறை. Show all posts

Thursday, 6 November 2014

ஐங்கோல மை பிரயோகம் மற்றும் செய்முறை

அன்பர்களே முதலில் நான் ஒரு பெரிய மாந்திரீக வாதி என்று குறிப்பிடுபவர்கள் இந்த ஐங்கோல மை பிரயோக முறையினை தெரிந்திருக்க வேண்டும் அதை எப்படி பயன் படுத்தி காரியத்தை சாதிக்கலாம் என்ற முழு அறிவு வேண்டும் .


இந்த ஐங்கோல மையினை பொதுவாகவே துர்தேவதைகளை வைத்து ஏவல் செய்வதற்காக பயன் படுத்துகிறார்கள் .இந்த மையானது கேரளாவில் கொல்லம் பகுதியில் ஒரு சில கிராணிகாரர்கள் என்று கூறுவார்கள் அவர்களிடம் வாங்கலாம் .
 இந்த மையை பயன்படுத்தி எதிரியின் ஏவலை  திக் பந்தனம் செய்வதற்கும் சிறு தெய்வங்களை வேலை வாங்குவதற்கும் ஏவல் செய்வதற்கும் செய்வினைகள் புரிவதற்கும் இந்த மை பயன் படும் .இந்த மை நமது கையில் இருந்தால் மட்டுமே எல்லோரும் கூறும் ஏவல் பில்லி சூன்யம் செய்வினை அனைத்தும் சாத்தியமாகும் எதிரி ஏவி விட்ட தேவதையை கட்டு படுத்தவும் இந்த ஐங்கோல மை பயன்படும் .

ஐங்கோல மை செய்முறை :

இறந்து போன பிணத்தின் நாடியில் கட்டியுள்ள நாடிக்கட்டு துணி ,கையில் கட்டியுள்ள கைகட்டுதுணி ,கால் கட்டுத்துணி , வில் போட்ட வாய்க்கரிசி ,பிணத்தின் நெற்றியில் வைத்த சந்தனம் ,போட்டு ,பிணத்தின் கழுத்தில் அணிந்த மாலை ,மண்டை ஓடு ,இவையெல்லாம் சேகரித்து பொடிசெய்து சித்தாமனக்கு எண்ணெய் விட்டு அரைத்து அதிலிருந்து தைலம் இறக்குவார்கள் இதுதான் ஐங்கோல தைலம் மை செய்யும் முறை .

ஐங்கோல மை பிரயோகம் :

இந்த மையை பயன் படுத்திதான் நிறைய பேர் கேரளாவில் ஜால வித்தைகள் காட்டுகிறார்கள் ,இந்தமையை பயன்படுத்தி குறிப்பாக மாடன்மார்கள் என்று கூறப்படும் எட்டு வகை மாடன்மார்களை வேலை வாங்கலாம் நாம் என்ன சொன்னாலும் அது செய்துய் விட்டு வரும் .

துர்தேவதைகளுக்கு பூஜைபோட்டு ஒரு சில யந்திரங்களை இந்த வீட்டில் வைக்க சொன்னால் அந்த யந்திரமானது நாம் கூறிய இடத்திற்கு சென்று விடும் 

இந்த மையை பயன்படுத்தி ஏவல் செய்யலாம் அடுத்து நல்ல வியாபாரம் நடக்கும் இடத்தில் இந்த மையுடன் கொஞ்சம் சுடுகாட்டு சாம்பலை சேர்த்து வியாபாரம் நடக்கும் இடத்தில் தூவி விட்டால் வியாபாரம் நடக்காமல் முடங்கி போய் விடும் .தாண்டு என்று கூறப்படுகிற முறை அதாவது ஒரு சில பூஜைகள் செய்து கருமைதடவி ஒரு சில பொருட்களை ஒரு இடத்தில் புதைத்து வைத்து விட்டால் அந்த இடத்தை எதிரி தாண்டியவுடன் அவன் மாண்டுபோவான் .இதுதான் தாண்டு என்று கூறப்படுவது .

இந்த விஷயங்கள் மிகவும் சூட்ஷமா சூட்சம விஷயங்கள் எல்லோரும் தெரிந்துகொள்வதற்காக கூறுகிறேன் ,யாரும் போலிகளை நம்பி ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக .

எந்த பிரச்சனைகளுக்கும் எங்களிடம் தீர்வுண்டு அதனால் தயங்காமல் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் செய்திகளை அனுப்பவும் .