Showing posts with label பாதாள மை. Show all posts
Showing posts with label பாதாள மை. Show all posts

Tuesday, 11 November 2014

பாதாள மை செய்முறை பிரயோகம்

புதையல் கண்டறிய ,நீர் நிலை கண்டறிய , பாதாள மை ... 

யாரிடமும் இல்லாத மிகவும் சூட்சமமான விஷயத்தை இந்த பதிவில் வெளியிட உள்ளேன் .இந்த மை பிரயோகம் தமிழகத்தில் ஓரிருவரிடம் மட்டும் தான் தெரிந்திருக்கும் அவர்களும் கேரளம் சென்று வித்தை கற்றவர்களுக்கு மட்டும் தான் இவ்வகை சாத்தியம் .



பாதாள மை செய்முறை :

ஐம்பது குளித்தவளை  எடுத்து அதை நிழலில் உலர்த்தி அதிலிருந்து தைலம் எடுத்து வசியத்திற்கு பயன்படுத்தப்படும் பாதாள மூலயில் சமூலம் பிடுங்கி அதை சுள்ளியில் வைத்து கருக்கி அண்டங்காக்கையின்  கண்ணும் சேர்த்து அதனுடன் அஞ்சனக்கல் சேர்த்து .ஆழமான கிணற்றில் பாலம் அமைத்து அதிலிருந்து அரைத்து சிமிழில் வைத்து கொண்டு அஞ்சனா தேவி பூஜை செய்ய வேண்டும் .அஞ்சனா தேவி மந்திரத்தை ஜெபித்து உள்ளங்கையில் மையை தடவி பார்த்தால் பாதாளத்தில் உள்ள அனைத்தும் தெள்ள தெளிவாக தெரியும் .

அஞ்சனா தேவி மந்திரம் :

"அங் ரிங் உம் மம் மும் ரம் றீம் க்லீம் 
அஞ்சனாதேவி விடு விடு திசை திசை ஓம் "

மேற்கூறிய விதமாக மை தயாரித்து செயல்படுத்தினால் தேவர்கள் எப்போதும் உங்களிடமே இருப்பார்கள் .இந்த செய்தியில் எந்த ஒளிவு மறைவும் இல்லை ,இதை முறையாக மாந்திரீகம் பயின்றவர்கள் புத்திசாலிகள் சரியாக செய்து பல சாதனைகள் படிக்கலாம் .